இந்தியா

அஜ்மீரை சேர்ந்த பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை 

EllusamyKarthik

உத்தர பிரேதசத்தில் 19 வயது இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அடுத்த சில நாட்களில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்த திருமணமான 29 வயது பட்டியலின பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். 

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அஜ்மீர் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்திலிருந்து தவுராய் கிராமத்திற்கு நோய்வாய்ப்பட்டிருந்த தன் தாயை பார்க்க அந்த பெண் சென்றுள்ளார். அப்போது வழியில் திப்பு என்ற நபர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக சாலைக்கு ஒதுக்குப்புறமாக இருந்த வயல் வெளிப் பகுதிக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

அதோடு நின்று விடாமல் தனது நண்பர்கள் இருவரையும் போன் செய்து அவர் வர சொல்லியுள்ளார். பின்னர் அவர்களும் அந்த பெண்ணை வன்கொடுமை செய்துள்ளனர். 

தொடர்ந்து பலமுறை வன்கொடுமை செய்துவிட்டு அந்த பெண்ணை அவர்கள் சாலையோரம் வீசி சென்றுள்ளனர். அதனையடுத்து தனது தாயார் வீட்டுக்கு சென்ற அந்த பெண் நடந்த சம்பவத்தை சொல்லியுள்ளார். பின்னர் தாயாருடன் காவல் நிலையம் சென்று தன்னை மூன்று  பேர் வன்கொடுமை செய்தார்கள் என்பதை புகாராக பதிவு செய்துள்ளார் அவர்.  போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.