இந்தியா

ஏப்ரல் 7-க்குள் கொரோனா பாதிப்பிலிருந்து தெலங்கானா மீளும்: சந்திரசேகர ராவ்

jagadeesh

தெலங்கானா மாநிலம் வரும் ஏப்ரல் ஏழாம் தேதிக்குள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுவிடும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநிலத்தில் இதுவரை 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 11 பேர் பூரண குணமடைந்து விட்டதாக சந்திரசேகர ராவ் தெரிவித்தார். 58 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 25 ஆயிரத்து 937 பேர் அரசு கண்காணிப்பில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

அவர்கள் தனிமைப்படுத்தப்படும் காலம் ஏப்ரல் ஏழாம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் அன்றைய தினம் தெலங்கானா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து மீண்டு விடும் என நம்புவதாக சந்திரசேகரnராவ் தெரிவித்தார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த பயிர்கள் கிராமங்களுக்கே சென்று கொள்முதல் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.