இந்தியா

வண்ணமயமான லேசர் ஷோ: அமிதாப், சச்சின் பங்கேற்பு

webteam

மும்பையில் உள்ள கேட் வே ஆப் இந்தியாவில் நேற்றிரவு வண்ணமயமான லேசர் விளக்குகள் நிகழ்ச்சி நடைபெற்றது.

வண்ண விளக்குகளால் பார்வையாளர்களை கவர்வதற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள புரொஜெக்சன் அமைப்பை மகாராஷ்ட்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் தொடங்கி வைத்தார். அப்போது மும்பை மாநகரின் கதையை லேசர் விளக்குகள் பின்னணியில் நடிகர்கள் அமிதாப் பச்சன், நானா படேகர் ஆகியோர் விவரித்தனர். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.