இந்தியா

இமாச்சலில் கடும் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

jagadeesh

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில், மணாலி-லே சாலையில் கிடக்கும் பனிக்கட்டிகள் அகற்றப்பட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களாக இமாச்சலப் பிரதேசத்தில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மணாலி-லே சாலையில், இரண்டு மீட்டர் உயரத்திற்கு பனி படர்ந்துள்ளதால், போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.

இதையடுத்து, சாலையில் உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் சாலைகள் சீரமைக்கப்பட்டு, போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.