இந்தியா

திரையரங்க சிசிடிவி சோதனையில் அதிர்ச்சி : சிறுமிக்கு நேர்ந்த கொடுமை அம்பலம்!

webteam

திருட்டு சம்பவத்திற்காக திரையரங்க சிசிடிவி கேமராவை சோதித்த போது, அதில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த காட்சிகள்
சிக்கின.

கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி படம் ஓடிக்கொண்டிருந்தபோது, ஒருவருடைய பணப்பை திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பணப்பையின் உரிமையாளர் திரையரங்க நிர்வாகத்திடம் புகார் தெரிவித்திருந்தார். அத்துடன் காவல் நிலையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்திற்காக திரையரங்கில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் அண்மையில் சோதித்து பார்க்கப்பட்டன.

இந்த சோதனையில் சில திடுக்கிடும் காட்சிகள் இருந்து, பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில் அந்தக் காட்சிகளில் திரையரங்கின் இருட்டைப் பயன்படுத்தி சிறுமி ஒருவருக்கு ஒரு நபர் பாலியல் தொந்தரவுகளை கொடுத்துள்ளார். அத்துடன் அந்த சிறுமியின் தாயாரும் அருகாமையிலேயே இருக்கிறார். அந்தக் காட்சிகளில் இருந்த புகைப்படத்தை தெளிவுபடுத்தி பார்த்தபோது, அதில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் நபர் தொழிலதிபர் மொய்தீன் குட்டி (60) என்பது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து சிறுமிக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக திரையரங்க நிர்வாகத்தினர், காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதற்குள் இந்த விவகாரம் ஊடங்களுக்கு செல்ல, தொழிலபதிருக்கு எதிராக கடும் கண்டங்கள் எழும்பியுள்ளன. இதையடுத்து மொய்தீனை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சிறுமிக்கு எதிராக நடந்து பாலியல் கொடுமைக்கு ஆதரவாக இருந்த, அச்சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீதும் பாலியல் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.