இந்தியா

சடங்கில் பங்கேற்று சவுக்கடி பெற்று கொண்ட சத்தீஸ்கர் முதலமைச்சர்

Sinekadhara

கோவர்தன் பூஜையில் கலந்து கொண்ட சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல், சவுக்கடி பெறும் சடங்கிலும் பங்கேற்றார்.

வட மாநிலங்களில் தீபாவளிக்கு அடுத்த நாள் கோவர்தன் பூஜை நடைபெறுவது வழக்கம். அப்படி துர்க் நகரில் கோவர்தன் பூஜையில் கலந்துகொண்ட சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் கலந்துகொண்டார். இதனையடுத்து நடைபெற்ற சடங்கில் 8 முறை அவருக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டது.