இந்தியா

மரம் விட்டு மரம் தாவும் சிறுத்தை : அச்சம் தரும் வீடியோ

webteam

கேரளாவின் தேயிலை தோட்டத்தில் பகல் நேரத்தில் சிறுத்தை ஒன்று மரம் விட்டு மரம் தாவும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் ‌உள்ள தேயிலை தோட்டத்தில் சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது.  இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள குமுளி, வண்டிப்பெரியார் பகுதிகளில் பகல் நேரத்திலேயே சிறுத்தை நடமாடுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.  இந்நிலையில் வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் தானியங்கி கேமராவை பொருத்தி கண்காணித்தனர்.

தற்போது அந்த காமராவில் வண்டிப்பெரியாரை அடுத்த பீருமேடு பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில், பகல் நேரத்தில் சிறுத்தை ஒன்று மரம் விட்டு மரம் தாவும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த காட்சியில் உள்ள சிறுத்தையின் நடமாட்ட பகுதிகளை வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.