இந்தியா

வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்பத் தளர்வுகள்

webteam

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் தளர்வுகளை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்பக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் புதிய தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, வெளிநாட்டில் வசிக்கும் வசிக்கும் இந்திய அடையாள அட்டை கொண்ட இந்தியர்கள் அவசர தேவைக்காக நாடு திரும்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் சிகிச்சைக்காகவும், உறவினர்கள் இறப்பிற்காக நாடு திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் திருமணமான ஒருவர் வெளிநாட்டிலிருந்தால், அவர்களும் நாடு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களும் தாயகம் திரும்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.