இந்தியா

எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன் மாயம்: தற்கொலையா?

webteam

கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மருமகனும் கஃபே காபி டே நிறுவனருமான வி.ஜி.சித்தார்த்தா மாயமாகியுள்ளார். அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. இவரது மருமகன் வி.ஜி.சித்தார்த்தா. இவர் காபி டே உட்பட சில நிறுவனங்களை நடத்தி வந்தார். காபி டே-யின் கிளைகள் இந்தியா முழு வதும் உள்ளன. இந்நிலையில் அவர் நேற்று இரவு மங்களூரில் உள்ள நேத்ராவதி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. 


இதுபற்றி அவரது கார் டிரைவர் கூறும்போது, ‘’காரை, நேத்ராவதி ஆற்றுப் பாலத்துக்கு ஓட்ட சொன்னார். அதன்படி சென்றேன். காரை பார்க் செய்துவிட்டு காத்திரு. வாக்கிங் சென்றுவிட்டு வருகிறேன் என்று கூறி சென்றார். ஆனால், திடீரென்று பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்துவிட்டார்’’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் கொடுத்த தகவலின்படி, போலீசாரும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவரை ஆற்றில் தேடி வருகின்றனர். 

இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, காங்கிரஸ் தலைவர் சிவகுமார் ஆகியோர், எஸ்.எம்.கிருஷ்ணா வீட்டுக்குச் சென்று அவருக்கு ஆறுதல் கூறினர்.