இந்தியா

வெள்ளத்தில் அ‌டித்துச்செல்லப்பட்ட பாலம்: 3 பேர் தத்தளிப்பு

Rasus

பீகாரில் கனமழை பெய்துவரும் நிலையில் பல்வேறு இடங்களில் பாலங்கள் இடிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அசாம், மேற்கு வங்கம், பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பீகாரில் கனமழையால் பாதிக்கப்பட்ட தரைப்பாலத்தில் ஆபத்தை உணரால், பல பேர் கடந்து சென்றனர். அவ்வாறு 3 பேர் பாலத்தைக் கடக்க முயன்றபோது பாலம் இடிந்து விழுந்தது. இதில் சிறுமி ஒருவர் உட்பட 3 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இது போன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விபத்துகள் நிகழ்வதால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாலங்களை அரசு, கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.