இந்தியா

சம்பள உயர்வு கொடுக்காத "பாஸ்" ! வழிப்பறி செய்த ஊழியர் !

jagadeesh

போதுமான அளவு சம்பள உயர்வு கொடுக்காத காரணத்தால் தன் முதலாளியிடம் வழிப்பறி செய்த ஊழியர், அவர் பணத்தை கொள்ளையடித்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் பரிதாபாத்தில் கட்டுமான நிறுவனத்தை ஒருவர் நடத்தி வருகிறார். அந்நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவருக்கு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் முதலாளி சம்பள உயர்வு வழங்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊழியர் முதலாளியை பழி வாங்க திட்டம் போட்டார். அதன்படி டெல்லிக்கு காரில் சென்றுக்கொண்டிருந்த முதலாளியை வழிமறித்து அவரிடமிருந்த ரூ10 லட்சத்தை கொள்ளையடித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த முதலாளி போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அந்த ஊழியரை போலீஸார் கைது செய்தது மட்டுமல்லாமல் ரூ.10 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து ஊழியரிடம் மேற்கொண்ட விசாரணையில் சம்பள உயர்வு கொடுக்காத முதலாளிக்கு பாடம் கற்றுக்கொடுக்கவே வழிபறியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.