இந்தியா

நீதிபதிகள் மூக்குக் கண்ணாடி வாங்க ஆண்டுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்

EllusamyKarthik

நீதிபதிகள் மூக்குக் கண்ணாடி வாங்க ஆண்டுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்க மகாராஷ்ரா அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஒவ்வொருவருக்கும் மூக்குக் கண்ணாடி வாங்குவதற்காக மகாராஷ்டிரா அரசு ஆண்டுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை துறை தீர்மானமும் போட்டுள்ளது. 

இதன் மூலமாக நீதிபதிகள் மற்றும் அவரை சார்ந்துள்ள அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்ட ஆலோசகரும் இணைச் செயலாளருமான யோகேஷ் அமேதா ஒப்புதல் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.