sex harassment x page
இந்தியா

லிப்ஃட் கேட்ட மாணவி.. பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய நபர்.. பெங்களூருவில் அதிர்ச்சி!

Prakash J

கொல்கத்தாவில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் லிப்ஃட் கேட்ட இளம்பெண் ஒருவர், பாலியன் வன்புணர்வுக்கு ஆளாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

model image

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் கோரமங்கலாவில் உள்ள பஃப் ஒன்றிற்கு கல்லூரி மாணவி ஒருவர் சென்றிருந்தார். பின்னர் பார்ட்டி முடிந்து, அவர் தன் நண்பர்களுடன் இருப்பிடத்துக்கு காரில் திரும்பியுள்ளார். அப்போது, அவர்கள் சென்ற கார் ஆட்டோ மீது மோதியதில் சிறு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, அந்த மாணவி அங்கிருந்த இடத்தைவிட்டு விலகிச் சென்றதுடன், அவ்வழியாகச் சென்ற ஒருவரிடம் லிஃப்ட் கேட்டிருக்கிறார். அந்தப் பெண்ணை அழைத்துச் சென்ற அவர், அதைத் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்றுள்ளார்.

இதையும் படிக்க: கொல்கத்தா மருத்துவர் கொலை | “முதல்வர் மீது நம்பிக்கை இல்லை” - குற்றஞ்சாட்டும் பெற்றோர்!

ஆள் இல்லாத இடத்திற்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பின்னர், அந்தப் பெண், SOS மூலம் தந்தை, சகோதரர்கள், காவல் துறைக்கு தகவல் செல்லும்படி செய்திருக்கிறார். இந்த எச்சரிக்கை அழைப்பை ஏற்ற காவல்துறை, அப்பகுதிக்குச் சென்று அந்தப் பெண்ணை மீட்டுள்ளது. போலீசார் அங்கு வருவதையறிந்த அந்த நபர் தப்பியோடி விட்டார். மீட்கப்பட்ட அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக பெங்களூரு கிழக்கு பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் ராமன் குப்தா, ”அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு, விசாரணை தீவிரமாய் நடைபெற்று வருகிறது. தப்பியோடிய பிடிக்க ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் அந்த நபர் கைது செய்யப்படுவார்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அமெரிக்க அதிபர் தேர்தல்: கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை.. உருவரீதியாகச் சீண்டும் ட்ரம்ப்!