இந்தியா

பசுக்களை திருடியதாக பீகாரில் இருவர் அடித்துக் கொலை?

பசுக்களை திருடியதாக பீகாரில் இருவர் அடித்துக் கொலை?

rajakannan

பீகாரில் பசுக்களை திருடியதாக கூறி இருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

பீகார் மாநிலம் பனியாபூரில் இருவர் உள்ளூர் மக்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக ஏ.என்.ஐ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பசுக்களை திருடியதாக கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.