உயிரிழந்த பெண்ணின் பகுதி pt web
இந்தியா

பெங்களூரு|30 துண்டுகளாக வெட்டப்பட்டு பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடல்.. அதிர்ச்சி சம்பவம்!

PT WEB

பெங்களூருவின் வயலிக்காவல் பகுதியில் உள்ள வீட்டில், 2 நாட்களாக மிகவும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர், அவ்வீட்டில் தங்கியிருந்த மகாலட்சுமியின் தாயாருக்கு தெரிவித்துள்ளனர். பின்னர் பெண்ணின் தாயாரும், சகோதரியும் அங்கு வந்துள்ளனர். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, மகாலட்சுமியின் உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு, பிரிட்ஜில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

30 துண்டுகளாக உடல் வெட்டப்பட்டிருந்த நிலையில், அதில் புழுக்களும் இருந்துள்ளன. சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்ட கூடுதல் காவல் ஆணையர், 10 நாட்களுக்கு முன்னர் கொலை நடந்திருக்கலாம் என தெரிவித்தார். மகாலட்சுமி, கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்ததாகவும், கொலையாளியை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு டெல்லியில், ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணின் உடல் 35 துண்டுகளாக வெட்டப்பட்டு, பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்தது நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் அப்பெண்ணின் காதலன் கைது செய்யப்பட்டார். தற்போது அதேபோன்றொரு கொடூரம் நிகழ்ந்துள்ளது.