இந்தியா

‘8 கோடி ரூபாய் நாயை காணவில்லை’ - கண்டுபிடித்தால் 1 லட்சம் பரிசு

webteam

8 கோடி ரூபாய் மதிப்புள்ள தன் நாயைக் காணவில்லை என பெங்களூருவில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஹனுமந்த நகர் காவல் நிலையத்துக்கு வந்த ஒருவர் தன் நாயைக் காணவில்லை என புகார் கொடுத்தார். புகாரை எடுத்துக்கொண்ட காவல்துறையினர் நாயின் மதிப்பைக் கேட்டு அதிர்ந்து போகினர். தன்னுடைய நாயின் விலை ரூ.8 கோடி என்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய் இனம் என்றும் அவர் தன் புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும் தன் நாயை யாராவது கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த சேதன் என்பவரே நாயைக் காணவில்லை எனபுகார் கொடுத்துள்ளார். தன் நாய் அலஸ்கான் மலமூட் இன நாய் என்றும் இரண்டு வருடங்களுக்கு முன்பு சீனாவில் இருந்து அதனை இறக்குமதி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.