இந்தியா

லடாக் எல்லையில் ராணுவத் தளபதி திடீர் ஆய்வு: பாதுகாப்பு படையினருடன் ஆலோசனை

JustinDurai
லடாக் எல்லையில் ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
லடாக் எல்லையில் சீனா ராணுவத்தை குவித்து வருவதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. எனவே சீனாவின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் எல்லையில் படைகளை நிலை நிறுத்தியுள்ளது. இதனால் இந்தியா - சீனா விவகாரத்தில் மோதல் போக்கு உருவாகி வரும் நிலையில், ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பு படையினருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.