இந்தியா

"அதிக கடன் பாக்கி வைத்துள்ள அரசு நிறுவனங்களுக்கு டிக்கெட் இல்லை"-ஏர் இந்தியா

jagadeesh

10 லட்ச ரூபாய்க்கும் மேல் கடன் பாக்கி வைத்துள்ள அரசு நிறுவனங்களுக்கு இனி டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை நிறுவ‌னங்கள் அலுவலக ரீதியிலான பயணங்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தையே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அவ்வாறான பயணங்களுக்கான தொகையை பல நிறுவனங்கள் முறையாக செலுத்தாததால், 268 கோடி ரூபாய் பாக்கி உள்ளதாக ஏர் இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனவே 10 லட்ச ரூபாய்க்கும் மேல் பாக்கி வைத்துள்ள நிறுவனங்களுக்கு இனி சேவை வழங்கப்பட மாட்டாது எனவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.