இந்தியா

குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு

jagadeesh

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், நிலுவையில் உள்ள மசோதாக்கள், இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிப்பு, உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரிக்குறைப்பு ஆகிய இரண்டு அவசர சட்டங்களை சட்டமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு இந்த கூட்டத் தொடரில் ஈடுபடும் என தெரிகிறது.

இந்த நிலையில் குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இன்று சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையிலும், நாளை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையிலும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படுகிறது.