இந்தியா

கலாபவன் மணி வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்

கலாபவன் மணி வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்

Rasus

நடிகர் கலாபவண் மணி உயிரிழந்த வழக்கின் விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்த கலாபவன் மணி, கடந்த ஆண்டு மார்ச் மாதம், கேரளாவில் உள்ள அவரது பண்ணை வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, கலாபவன் மணியின் மனைவி‌ நிம்மி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையேற்று, வழக்கை சி.பி‌.ஐ.க்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கலாபவன் மணியின் மரண வழக்கு விசாரணை தற்போது சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது.