குமாரசாமி - விஜய் டாடா pt desk
இந்தியா

தொழிலதிபரிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல்? மத்திய அமைச்சர் குமாரசாமி மீது வழக்குப்பதிவு!

பணம் கேட்டு தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, மத்திய அமைச்சர் குமாரசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரான விஜய் டாடா, கர்நாடக காவல் துறையிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர், முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர் ரமேஷ் கவுடாவின் தொலைபேசி வாயிலாக, குமாரசாமி தன்னிடம் பேசியதாக கூறியுள்ளார். குமாரசாமி, சென்னப்பட்டினா இடைத்தேர்தலுக்காக தனக்கு ரூ 50 கோடி தர வேண்டுமென கேட்டதாக கூறியுள்ளார்.

Kumarasamy

தன்னிடம் அவ்வளவு பணமில்லை என கூறியபோது, “பணம் தராவிட்டால் உன்னை என்ன செய்வேன் என்றே தெரியாது. பெங்களூரில் நீ பிழைப்பது கடினம்” என குமாரசாமி தன்னை மிரட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.

குமாரசாமியும், ரமேஷ் கவுடாவும் பணம் கேட்டு தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும், புகாரில் விஜய் டாடா குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, குமாரசாமி மற்றும் ரமேஷ் கவுடா மீது, 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.