இந்தியா

சுதந்திர தினத்தை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் சதி திட்டம்

webteam

சுதந்திர தின நிகழ்வை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

நாட்டின் 72வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்ப‌ட உள்ளது. இதனை சீர்குலைக்கு நோக்கத்தில் 6 பயங்கரவாதிகள் டெல்லியில் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. பாகிஸ்தானை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த நான்கு பயங்கரவாதிகள் எல்லை மாநிலமான காஷ்மீர் வழியாக டெல்லிக்குள் ஊடுருவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர்கள் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் மத்திய உளவுத்துறை கூறியுள்ளது. இதனால் தலைநகர் டெல்லி முழுவதும் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது. மேலும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் இரண்டு பேர் நாடாளுமன்றத்தை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.