குளம் மாதிரி படம் கூகுள்
இந்தியா

பீகார் ‘ஜிவித்புத்ரிகா’ திருவிழா | புனித நீராடிய போது 37 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழப்பு

பீகாரில் ‘ஜிவித்புத்ரிகா’ திருவிழாவின் போது புனித நீராடிய 43 பேர் உயிரிழப்பு (37 குழந்தைகள்) மற்றும் 3 பேர் காணவில்லை என அரசுதெரிவித்துள்ளது.

PT WEB

பீகாரில் ‘ஜிவித்புத்ரிகா’ திருவிழாவின் போது புனித நீராடிய 43 பேர் உயிரிழப்பு (37 குழந்தைகள் உட்பட) மற்றும் 3 பேர் காணவில்லை என அரசுதெரிவித்துள்ளது.

முன்னதாக பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் புதன்கிழமை ஜிவித்புத்ரிகா திருவிழாவின் போது இரண்டு வெவ்வேறு கிராமங்களில் உள்ள குளங்களில் புனித நீராடிய எட்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதன்பூர் தொகுதியில் உள்ள குஷாஹா கிராமத்திலும், பருன் தொகுதியில் உள்ள இதாஹத் கிராமத்திலும் உள்ள இரண்டு தனித்தனி குளங்களில் தலா நான்கு பேர் மூழ்கி உயிரிழந்தனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, இறந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையாக அறிவித்தார்.

இந்நிலையில் 3 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் மொத்தம் 15 மாவட்டங்களில் புனித நீராடியவர்களில் 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் இதில் 37 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் 3 பேர் காணவில்லை என மாநில அரசு தெரிவித்துள்ளது.

அதில் வின்கிழக்கு மற்றும் மேற்கு சம்பரான், நாளந்தா, அவுரங்காபாத், கைமூர், பக்சர், சிவான், ரோஹ்தாஸ், சரண், பாட்னா, வைஷாலி, முசாபர்பூர், சமஸ்திபூர், கோபால்கஞ்ச் மற்றும் அர்வால் மாவட்டங்களில் உயிரிழப்பு சம்பவம் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஜிவித்புத்ரிகா திருவிழா என்பது பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்படுகிறது. தங்கள் குழந்தைகளும் நலனுக்காக பெண்கள் விரதம் இருந்து தங்கள் பிள்ளைகளுடன் ஆற்றில் நீராடுவது வழக்கம். அந்த வகையில் ஐந்தாண்டு நடைபெற்ற தீவிரவாவில் வெவ்வேறு மாவட்டங்களில் நீராட்டத்தின் போது 37 குழந்தைகள் உள்ளிட்ட 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.