விமான நிலையம் புதிய தலைமுறை
இந்தியா

அகமதாபாத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 4 பேர் கைது

PT WEB

குஜராத் காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு, கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக இலங்கையில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு குறித்த விசாரணையை தொடர்ந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்கள், அகமதாபாத் விமானநிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 4 பேரை கைது செய்துள்ளனர். 4 தீவிரவாதிகளையும் ரகசிய இடத்தில் வைத்து குஜராத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.