இந்தியா

ஹைதராபாத் கார் விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு- சிசிடிவி காட்சி

webteam

ஹைதராபாத்தில் ஒரு கார் மீது மற்றொரு கார் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 

ஹைதராபாத்தின் ஷமீர்பெட் பகுதியில் ஒரு எஸ்யுவி கார் வேகமாக வந்துள்ளது. இந்தக் கார் அதிக வேகத்தில் இயக்கப்பட்டதால் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனைத் தொடர்ந்து இந்த கார் சாலையிலிருந்த தடுப்பில் மோதி சாலையின் எதிர்புறம் வந்துக் கொண்டிருந்த கார் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். அத்துடன் இந்தக் காரில் பயணம் செய்த 2 பேர் காயம் அடைந்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

இந்த விபத்து குறித்து காவல்துறையினர், “இந்த விபத்தை ஏற்படுத்திய எஸ்யுவி வாகனம் ஹைதராபாத்திலிருந்து கரீம் நகரை நோக்கி சென்றுள்ளது. அப்போது இந்த கார் கட்டுப்பாட்டை இழந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் காரில் பயணம் செய்த பெண் உட்பட மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.