ஹைதராபாத் முகநூல்
இந்தியா

ஹைதராபாத் | வேலை கிடைத்ததற்கு பார்ட்டி கொடுத்த இளம் பெண்! பால்ய நண்பனாலேயே நேர்ந்த விபரீதம்!

ஜெனிட்டா ரோஸ்லின்

ஹைதராபாத்தில், 24 வயதான பெண் ஒருவர், தனக்கு வேலை கிடைத்ததற்காக தனது நண்பர்களுக்கு பார்டி கொடுத்த போது, தனது பால்ய நண்பன் மற்றும் அவரது நண்பனால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் கடந்த திங்கட் கிழமை இரவு, 24 வயது மென்பொருள் ஊழியர் தனக்கு வேலை கிடைத்ததை கொண்டாடும் வகையில், தனது நண்பர்களை அழைத்து கொண்டு வனஸ்தலிபுரத்தில் அமைந்துள்ள ஹோட்டலில் உணவு அருந்த சென்றுள்ளார். இவருடன், ஒரு பெண் மற்றும் 2 ஆம் வகுப்பிலிருந்து தோழனாக இருக்கும் 24 வயதுடைய ஆண் ஒருவரும் வந்துள்ளனர்.

இந்நிலையில், உணவு அருந்திய இவர்கள், அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு அங்கிருந்த ஹோட்டலிலேயே தங்கலாம் என்று முடிவு செய்து, அங்கேயே தங்கியுள்ளனர்.

இந்நிலையில், மென்பொருள் ஊழியர் தனது சிறுவயது ஆண் நண்பராலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். பிறகு, அந்த நபர் தனது நண்பரையும் அழைத்து, இப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனயடுத்து, தான் இந்நிலைக்கு ஆக்கப்பட்டதை அறிந்த அப்பெண், தனது சகோதரரை அழைத்து நடந்ததை தெரிவித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த அவர், இப்பெண்ணை அங்கிருந்து மீட்டுள்ளார்.

இந்நிலையில், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட சூழலில், தற்போது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல 26 வயதான பெண் ஒருவரும் தெலுங்கானாவிலிருந்து ஆந்திராவிற்கு ஸ்லீப்பர் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்து ஓட்டுநராலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண், ‘டயல் 100’ என்ற சேவையின் மூலம், காவல்துறையினரை அழைத்து இது குறித்து தெரிவித்துள்ளார். இதனயடுத்து, அவரை பிடிக்க காவல்துறையினர் முயன்றபோது, அந்நபர் பேருந்திலிருந்து தப்பித்து சென்றுள்ளார்.