இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

webteam

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

புல்வாமா பகுதியில் உள்ள அவண்டிபோராவின் கோரிபோரா பகுதியில் இந்த சண்டை நடைபெற்றது. சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அடையாளம் காணப்படவில்லை என ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்