இந்தியா

பர்த் டே பார்ட்டியில் பயங்கரம்: பாலியல் வன்கொடுமை செய்த கிளாஸ்மேட்ஸ்!

webteam

பிறந்த நாள் பார்ட்டியில் 17 வயது சிறுமியை உடன் படிக்கும் நண்பர்களே பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. தனியார் கல்லூரி ஒன்றில் படித்துவருகிறார். இவரது தோழிக்கு கடந்த சில நாட்களுக்கு முன், பிறந்த நாள். அங்கு சென்ற அந்தச் சிறுமியை உடன் படிக்கும் நான்கு மாணவர்கள் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு அந்தச் சிறுமியை மிரட்டி தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். அதை செல்போனில் வீடியோவாகவும் எடுத்தனர். இந்த விஷயத்தை வெளியே சொன்னால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவோம் என்று மிரட்டிவிட்டு சென்றனர்.
இதையடுத்து நடந்த சம்பவத்தை வீட்டில் சொன்னார் சிறுமி. அவர்கள் போலீசில் புகார் செய்ததை அடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.