இந்தியா

ஓடும் காரில் 17 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை!

ஓடும் காரில் 17 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை!

webteam

17 வயது சிறுவனை 6 பேர் ஓடும் காருக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கொல்கத்தாவில் நடந்துள்ளது

கொல்கத்தாவின் கிட்டர்போர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தன் பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்துள்ளான். அப்போது அவனுக்கு ஏற்கெனவே அறிமுகமான 6 பேர், காரில் வந்து அவனிடம் பேச்சு கொடுத்துள்ளனர். அவனை கட்டாயமாக காருக்குள் ஏற்றியுள்ளனர்.

பிறகு ஓடும் காரில் அந்த சிறுவனை 6 பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவனைத் தாக்கி அவனிடம் இருந்த ரூ.17 ஆயிரம் ரொக்கம் மற்றும் அவனது வெள்ளிச் செயினையும் பறித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் 6 பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து தெரிவித்துள்ள காவலர்கள், ஓடும் காருக்குள் ஒருமணி நேரம் சிறுவனுக்கு பாலியல் சீண்டல் கொடுக்கப்பட்டுள்ளது.

பிறகு அவனை காரில் இருந்து தள்ளிவிட்டு சென்றுள்ளனர். சிறுவனுக்கு சிராய்ப்புகளும், உடலில் காயங்களும் உள்ளன என தெரிவித்துள்ளார்.