சுற்றுச்சூழல்

ஓசூர்: குட்டையில் ஆனந்த நீராடிய ஒற்றை காட்டு யானை!

kaleelrahman

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே உள்ள வனப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் குட்டையில் ஒற்றை காட்டு யானை ஆனந்தமாய் குளித்து கொண்டிருந்தது அதனை அப்பகுதியில் செல்பவர்கள் கண்டு ரசித்தனர்.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் நீர்நிலைகளைத் தேடி செல்கின்றன. வனப்பகுதியில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நீர்த்தொட்டி மற்றும் மழைநீர் குட்டையில் விலங்குகள் நீரை குடித்து செல்கின்றன. இதுபோல் தான் இன்று ஒற்றை காட்டுயானை நீர் குட்டையில் விளையாடிக் கொண்டிருந்தது.