கல்வி

’கல்வி தொலைக்காட்சியை பாருங்கோ’ - தண்டோரா அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தலைமை ஆசிரியர்

kaleelrahman

திருச்சியில் மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியை பார்க்க வலியுறுத்தி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தண்டோரா அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அரசு உதவிபெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், கல்வித் தொலைகாட்சி மூலம் மாணவர்கள் கல்விபயில வேண்டுமென தண்டோரா அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தனியார் பள்ளி மாணவ மாணவிகள் ஆன்-லைன் மூலம் பாடம் கற்கும் நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியின் முழு பயனையும் அடைய வேண்டுமென தலைமை ஆசிரியர் வலியுறுத்தியுள்ளார்.