கல்வி

கல்லூரி மாணவர்களுக்கு இறுதித்தேர்வை தவிர்த்து அனைத்திலும் தேர்ச்சி : கே.பி.அன்பழகன்

webteam

கட்டணம் கட்டிவிட்டு தேர்வெழுத தயாராக இருந்த கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இறுதித் தேர்வுகளை தவிர்த்து மற்ற அனைத்திலும் தேர்ச்சி அளிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் கே.பி. அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தபோது, “அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கல்வி கட்டணம் உயர்வு இல்லை. கடந்த ஆண்டு 480 கல்லூரிகள் இருந்த நிலையில், இந்தாண்டு கல்லூரிகளின் எண்ணிக்கை 458 ஆக குறைந்துள்ளது. புதிய கல்வி கொள்கை குறித்து செயலாளர் தலைமையில் ஆராய்ந்து குழு அமைக்கப்படும். கட்டணம் கட்டிவிட்டு தேர்வு எழுத தயாராக இருந்த கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள். தொலைதூர கல்வியில் ஈடுபடும் மணவர்களுக்கும் இது பொருந்தும்” என்றார்.