கல்வி

கூட்டுறவுத் துறையில் 4,000 பேருக்கு பணி

webteam

கூட்டுறவுத் துறையில் இன்னும் நான்காயிரம் பேரை பணி நியமனம் செய்ய இருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். 
சென்னை அண்ணா நகரில் இதுகுறித்து பேசிய அவர், கூட்டுறவுத்துறையில் தவறுகள் நடக்காமல் இருக்க விஜிலென்ஸ் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூபே கார்டு வைத்துள்ள நான்கு லட்சத்து 65 ஆயிரம் பேர் ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க வசதி செய்து தரப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தேவைப்படுபவர்களுக்கு பயிர்க்கடன் கொடுக்க கூட்டுறவு வங்கிகள் தயாராக இருக்கிறது என அவர் தெரிவித்தார்.