குற்றம்

17 வயது சிறுமியை திருமணம் செய்ய முயற்சி : போக்சோவில் இளைஞர் கைது

webteam

காரைக்குடியில் சிறுமியை திருமணம் செய்ய முயன்றதாக இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சிரவிக் கோட்டையை சேர்ந்தவர் தங்கவேலு மகன் பழனிச்சாமி. (27) இவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த தனது உறவினர் மகளான 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் சிறுமியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் சிறுமியை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் சிறுமியை அழைத்து சென்றது பழனிச்சாமிதான் என தெரியவந்தது. இதனையடுத்து, சிறுமியை மீட்ட காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் பழனிச்சாமி மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.