Murder case pt desk
குற்றம்

மதுரை: மதுபோதையில் தகராறு செய்த கணவர் - ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூர செயல்

மேலூரில் மதுபோதையில் தகராறு செய்த கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.

webteam

செய்தியாளர்: ரமேஷ்

மதுரை மாவட்டம் மேலூர் கருத்தப்புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில்பாண்டி (45), கோகிலா (34) தம்பதியர். இவர்கள் இருவரும் கட்டட கூலி வேலை செய்து வரும் நிலையில், செந்தில்பாண்டி அடிக்கடி மது குடித்துவிட்டு போதையில் வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் செந்தில் பாண்டி நேற்றும் மது போதையில் வந்து தகராறு செய்யவே, ஆத்திரமடைந்த மனைவி கோகிலா, செந்தில் பாண்டியை கட்டையால் தாக்கிவிட்டு அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.

Ambulance

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ப்ரீத்தி தலைமையிலான போலீசார், செந்தில் பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக கோகிலாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலூரில் கணவனை மனைவியே கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.