Accused pt desk
குற்றம்

தென்காசி: அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் கைது

webteam

செய்தியாளர்: டேவிட்

தென்காசி மாவட்டம் குருக்கள்பட்டியில் கடந்த 8ம் தேதி அதிமுக பிரமுகர் வெளியப்பன் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் மேலநீலித நல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மற்றும் அவரது பெரியப்பா மகன் கோவேந்திரன் தரப்பினருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெளியப்பன் (அதிமுக பிரமுகர்) தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

Arrested

இதன் காரணமாக கடந்த 8ம் தேதி காலை வெளியப்பன் நடை பயிற்சி சென்ற போது அவரை பாலமுருகன் தரப்பினர் வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த வெளியப்பன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் பாலமுருகன் மற்றும் கோவேந்திரன் ஆகியோரை பனவடலிசத்திரம் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.