குற்றம்

தேவர் ஜெயந்தி கொண்டாட்டத்தில் பெண் போலீசாரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட இருவர் கைது

webteam

தேவர் ஜெயந்தியையொட்டி சென்னை நந்தனத்தில் தேவர் சிலைக்கு முக்கிய தலைவர்கள் நேற்று மரியாதை செலுத்தினர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்களிடம் 2 பேர் அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் நிகழ்ந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த போலீசார் அந்த 2 பேரை கைது செய்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் சென்னை ரெட்டேரியை சேர்ந்த விஜயாபண்டி, தர்மேந்திரன் என்பது தெரிந்தது. 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். கைதான விஜயபாண்டி மீது சோழவரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளது. கைதான 2 பேர் மீது 294(பி)- ஆபாசமாக திட்டுதல், 353- அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைதான 2 பேரையும் தேனாம்பேட்டை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் செங்கல்பட்டு கிளைச்சிறையில் அடைத்தனர்.