fire accident pt desk
குற்றம்

திருவள்ளூர்|கணவருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக பெண் மீது பெட்ரோல் ஊற்றிய மனைவி.. பறிபோன உயிர்!

webteam

செய்தியாளர்: எழில்

திருவள்ளுவர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு பார்வதி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், சுரேஷ்க்கு ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.

சுரேஷின் காய்கறி கடையை ராஜேஸ்வரி கவனித்து வந்துள்ளார். இதனையடுத்து, சுரேஷின் மனைவி பார்வதி கடந்த 9-ஆம் தேதி காலை திருவள்ளூர் மார்க்கெட் பகுதிக்கு வந்துள்ளார்.

Death

இதையடுத்து காய்கறி கடையில் இருந்த ராஜேஸ்வரி மீது பெட்ரோலை ஊற்றியுள்ளார். அப்போது பின்னால் இருந்த விளக்கிலிருந்து தீப்பற்றி ராஜேஸ்வரி எரித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சுரேஷின் மனைவி பார்வதி மற்றும் அவரது உறவினர்கள் ராஜேஸ்வரி இருக்கும் காய்கறி கடைக்கு வேகமாக வருவதும், பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை ராஜேஸ்வரி மீது ஊற்றுவதும் பின்னர் ராஜேஸ்வரிக்கு பின்னால் சுரேஷின் தந்தையின் படத்தின் முன் ஏற்றி வைத்திருந்த விளக்கில் இருந்து தீப்பற்றி ராஜேஸ்வரி ஏரியும் காட்சிகள் பதிவாகி பெரும் பரபரப்பை அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து, உடல் முழுவதும் 80 சதவீத தீக்காயத்துடன் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக சுரேஷ், அவரது மனைவி பார்வதி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.