Accused with forest dept pt desk
குற்றம்

திருப்பத்தூர்: சாரைப்பாம்பை சமைத்து சாப்பிட்ட இளைஞர் கைது - வீடியோ வைரலான நிலையில் வனத்துறை அதிரடி

webteam

செய்தியாளர்: சுரேஷ்

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (30). இவர் நேற்று சமூக வலைதளங்களில் சாரைப்பாம்பின் தோலை உரித்து சமைப்பதற்காக சுத்தம் செய்வது போன்ற வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார்.

ராஜேஷ்குமார்

இதனை ஆதாரமாகக் கொண்டு திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் உத்தரவின் பேரில், திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன் தலைமையில் வனவர் மற்றும் வனப் பணியாளர்கள் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து பெருமாபட்டு கிராமத்திற்குச் சென்ற அவர்கள், ராஜேஷ் குமாரை கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில், ராஜேஷ் குமார், சாரைப்பாம்பை சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷ்குமாரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.