குற்றம்

நெல்லை பள்ளி விபத்து: தாளாளர், தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் கைது

Veeramani

நெல்லை சாஃப்டர் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விபத்தில் பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக சாஃப்டர் பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமை ஆசிரியர் ஞானசெல்வி மற்றும் கட்டட ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை நெல்லை சாஃப்டர் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 4 மாணவர்கள் மருந்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.