குற்றம்

மதுபோதையில் தாயை கொலை செய்த கொடூர மகன்

webteam

ஆந்திராவில் தாயை கொலை செய்த மகனை கிராம மக்கள் கட்டிவைத்து தர்மஅடி கொடுத்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வி.கோட்டா பகுதியில் கணவரை இழந்த பெல்லம்மா - அவரது மகன் ராமகிருஷ்ணன் ஆகியோர் வசித்து வந்தனர். மதுவுக்கு அடிமையான ராமகிருஷ்ணன் வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக கட்டையால் தாக்கியதில் தாயார் உயிரிழந்தார். இதனையறிந்த கிராம மக்கள் தலைமறைவாக இருந்த ராமகிருஷ்ணனை பிடித்து மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்து உதைத்தனர். தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.