குற்றம்

சேலம்: கல்லூரி கௌரவ விரிவுரையாளரை தாக்கியதாக 2 மாணவர்கள் கைது

kaleelrahman

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள காட்டுக்கோட்டை அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளரை தாக்கிய வழக்கில் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் ஆங்கிலத்துறை தலைவராக இருக்கும் ராம் சங்கர் மீது பாலியல் புகார் மற்றும் சக ஆசிரியர்களுடன் மோதல் போக்கை கடைபிடிப்பது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், கௌரவ விரிவுரையாளராக பணிபுரியும் குணசேகர் என்பவரை ராம் சங்கர் கடந்த மாதம் 26ஆம் தேதி தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் வீடு திரும்பிய குணசேகரை 3 இளைஞர்கள் வழிமறித்து தாக்கியதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் 2 மாணவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து அவர்களை கைது செய்த காவல் துறையினர், தலைமறைவான மற்றொரு மாணவர் தேவா, ஆங்கிலத்துறை தலைவர் ராம்சங்கர் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.