மதபோதகர் கைது pt desk
குற்றம்

கிருஷ்ணகிரி: பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம் - மதபோதகர் கைது

webteam

செய்தியாளர்: பழனிவேல்;

கிருஷ்ணகிரி தனியார் பள்ளிகளில் போலி என்.சி.சி முகாம் நடத்தி, மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கை, சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில் அக்குழுவினர், முக்கிய குற்றவாளியான சிவராமனின் நெருங்கிய நண்பரான டேனியல் அருள்ராஜை கைது செய்துள்ளனர்.

sexual harres

ஜிம் மாஸ்டராகவும், மத போதகராகவும் இருந்து வந்த டேனியல் அருள்ராஜ், சிவராமனின் குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை இந்த வழக்கில், தனியார் பள்ளியின் பெண் முதல்வர், மாவட்ட என்.சி.சி ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி என 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய குற்றவாளியான சிவராமன் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.