குற்றம்

பழனி: சிறுமிக்கு பாலியல் தொல்லை – பேருந்து ஓட்டுநர் போக்சோவில் கைது

kaleelrahman

பழனி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பஸ் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்த லிங்கேஸ்வரன் என்பவரின் மகன் மனோஜ் குமார் (30). தனியார் பஸ் டிரைவரான. இவருக்கும், வயலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அவ்வப்போது சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனோஜ் குமார் அந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், மனோஜ் குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.