Accused pt desk
குற்றம்

மும்பை டூ சென்னை: ரயிலில் கடத்திவரப்பட்ட தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள்! கொத்தாக பிடித்த போலீசார்!

webteam

செய்தியாளர்: நரேஷ்

சென்னை மற்றும் திருவள்ளுாரை சேர்ந்த இளைஞர்கள், இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரிகளை மும்பையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் இன்று அதிகாலை திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் தலைமையில், ஆய்வாளர்கள் மதியரசன், விஜயலட்சுமி மற்றும் தனிப்படை போலீசார், திருத்தணி ரயில் நிலையத்தில் மும்பை அதிவிரைவு ரயிலில் சோதனை மேற்கொண்டனர்.

Drug pills

அப்போது சீட்டுகளுக்கு அடியில் போதை மாத்திரைகளை பதுக்கிவைத்து கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து இருவரை கைது செய்த திருத்தணி போலீசார், போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதே போல் மது விலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார், இருவரை கைது செய்து போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர். திருத்தணி போலீசார் கைது செய்த இளைஞர்களிடம் நடத்திய விசாரணையில் திருவள்ளுார் எம்.ஜி.எம் நகரை சேர்ந்த தயாளன் (23), மோனிஷ் குமார் (28) ஆகியோர், 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை ரூ.38க்கு வாங்கி அதை தமிழகத்திற்கு கடத்தி வந்து ஒரு மாத்திரையை 700க்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதனை அடுத்து அவர்களிடம் இருந்து ரூ.4.67 லட்சம் மதிப்புள்ள 670 போதை மாத்திரைகளை பறிமுதல் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதேபோல் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த யுவராஜ் (29), மோகன் (26) ஆகிய இருவரிடம் இருந்து ரூ.3.35 லட்சம் மதிப்புள்ள 525 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.