குற்றம்

நட்சத்திர ஓட்டலில் கருணாஸ் நண்பர்கள் மோதல்: ஒருவர் கைது

webteam

நட்சத்திர ஓட்டல் மதுக்கூடத்தில் கருணாஸ் நண்பர்களுக்கு இடையே நடந்த மோதலை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை எம்ஆர்சி நகரில் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. இங்கு நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், கடந்த சனிக்கிழமை அன்று அவரது நண்பர்கள் பரணீஸ்வரன், அஜய், தாமோதரன் உள்ளிட்டோருடன் சென்றார். அப்போது  பரணீஸ்வரனுக்கும் அஜய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாய் தகராறாக தொடங்கிய இந்த சண்டை, பின் மோதலாக மாறியது. இதில் அஜய்யின் நண்பர்கள் 5-க்கும் மேற்பட்டவர்கள் தாக்கியதில் பரணீஸ்வரன் காயமடைந்தார்.

இதையடுத்து பரணீஸ்வரன் கொடுத்த புகாரை அடுத்து, அஜய்யை போலீசா கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சியும் வெளியாகியுள்ளது.