Accused pt desk
குற்றம்

கர்நாடகா | ”எங்கள ஏன் மொறச்சு பாக்குற” - வம்பிழுத்து இளைஞரை கத்தியால் குத்தி கொலைசெய்த கும்பல்!

webteam

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டம் சிஞ்சொலி பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷவர்தன் (34), இவர் கடந்த 10 ஆண்டுகளாக பன்னார்கட்டா அருகே உள்ளே சி.கே.பாலிய, பகுதியில் தங்கி தனியார் பள்ளிகளுக்கு சீருடைகள் சப்ளை செய்து வந்துள்ளார். இவர் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது மது அருந்திவிட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Murder

இந்நிலையில், நேற்று இரவு மது அருந்துவதற்காக பாருக்கு சென்றுள்ளார். அப்போது பார் கேஷ் கவுண்ட்டர் பகுதியில் குடிபோதையில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல் ஹர்ஷவர்தனை ’எங்களை பார்த்து எதற்கு முறைக்கிறாய்’ என்று அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து ’என்னை ஏன் அடிக்கிறீர்கள்’ என்று கேட்க ஹர்ஷவர்த்தனை, பீர்பாட்டில் மற்றும் கத்தியால் சாரா மாறியாக அடித்தும் கத்தியால் குத்தியும் அந்த கும்பல் தாக்கியுள்ளது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை பிடிக்க முயன்றபோது மூன்று பேர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இரண்டு பேரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து ஜோசப் மற்றும் கணேஷ் ஆகிய இருவரையும் கைது செய்த பன்னார்கட்டா போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.