குற்றம்

’பத்மாவத்’ ஓடிய தியேட்டரில் பாலியல் வன்கொடுமை: பேஸ்புக் நண்பர் கைது!

webteam

’பத்மாவத்’ படம் பார்க்க சென்ற இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக, பெண்ணின் பேஸ்புக் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஐதராபாத்தைச் சேர்ந்தவர், சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 19. இவருக்கு கடந்த இரண்டு மாதத்துக்கு முன் பேஸ்புக் மூலம் நண்பர் ஆனார் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும் நட்பாகப் பழகத் தொடங்கினர். இந்நிலையில் ’பத்மாவத்’ படம் பார்க்க போகலாமா? என்று கேட்டிருக்கிறார் சுரேஷ். சரி, என்றார் சுதா. 

கடந்த 31-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள பிரஷாந்த் தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்றனர்.  கூட்டம் அதிகமில்லை. ஒதுக்குப் புறமாக அமர்ந்து படம் பார்த்தனர். பின்னர் படம் ஓடிக்கொண்டிருந்த போது, சுதாவை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் சுரேஷ். கதறி அழுத சுதாவிடம், இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியும் உள்ளார். இதையடுத்து பெற்றோரிடம் சொன்னார் சுதா. அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.

‘பாலியல் வன்கொடுமை காரணமாக, சுதாவின் உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்’ என்று போலீஸ் அதிகாரி மாதையா தெரிவித்தார்.