குற்றம்

வாணியம்பாடி: திரைப்பட பாணியில் காரை பின்தொடர்ந்து ரூ.25 லட்சம் வழிப்பறி

வாணியம்பாடி: திரைப்பட பாணியில் காரை பின்தொடர்ந்து ரூ.25 லட்சம் வழிப்பறி

webteam

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே திரைப்பட பாணியில் 25 லட்ச ரூபாய் பணம் வழிப்பறி செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்த பைனான்சியர் ஞானசேகரன் தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த போது, அவரை பின்தொடர்ந்து காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வழி மறித்தது. அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஞானசேகரனை தாக்கிய அந்த கும்பல், காரில் இருந்த 25 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு தப்ப முயன்றது. அப்போது, ஞானசேகரனின் நண்பர் ஒருவர் கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் சாவியை மேம்பாலத்தில் இருந்து கீழே வீசி எறிந்தார்.

இதனையடுத்து கொள்ளையர்கள் பணத்துடன் தப்பி ஓடினர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கொள்ளையர்களின் காரில் இருந்த பான் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஞானசேகரன் சூதாட்டத்தில் 25 லட்ச ரூபாய் சம்பாதித்து கொண்டு வந்ததும், அதனால் ஏற்பட்ட மோதலில் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.