போக்ஸோ வழக்கில் கைதான பவித்ரா புதிய தலைமுறை
குற்றம்

சிவகாசி: 15 வயது பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை... தனியார் பள்ளி ஆசிரியை போக்சோவில் கைது!

PT WEB

என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சிவானந்தா நகரை சேர்ந்த சேர்ந்தவர் பவித்ரா (24). இவர் தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பவித்ரா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் தன் வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார். அப்போது டியூஷன் வகுப்பிற்கு 15 வயது பள்ளி மாணவன் ஒருவர் படிக்க வந்துள்ளார்.

அப்போது பள்ளி மாணவனுக்கும், பவித்ராவிற்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மாணவருடன், ஆசிரியை அடிக்கடி தனிமையில் இருந்துவந்துள்ளார். மாணவனின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதை கவனித்த அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது மாணவன், டியூஷன் ஆசிரியையுடன் இருந்த உறவு பற்றி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியை போக்சோவில் கைது!

சிவகாசி கிழக்கு காவல் நிலையம்

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மாணவனின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து பவித்ராவை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது